இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் |
தனது படங்களுக்கு வித்தியாசமான தமிழ்ப்பெயர் சூட்டுபவர் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பிருந்தே தமிழ் பெயர்களை சூட்டிய இவர், தனது புதிய படம் ஒன்றிற்கு நடுநிசி நாய்கள் என்று பெயரிட்டிருக்கிறார். புதுமுகம் வீரா நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். க்ரைம் - த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் பாடல்களை கிடையாதாம். தற்போது இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறது நடுநிசி நாய்கள். மறைந்த பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளில் புகழ்பெற்ற கவிதையொன்றின் பெயர் நடுநிசி நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலைப்பைப் போலவே படமும் கவித்துவத்துடன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




